Friday, 10th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மாசிமகப் பெருவிழாவையொட்டி கும்பகோணத்தில் ஸ்ரீ ஆதி கும்பேஸ்வரர் உள்ளிட்ட சிவாலயங்களின் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
மாசி மகப் பெருவிழா கடந்த மாதம் 28 ஆம் தேதி கும்பகோணத்தில் உள்ள சிவாலயங்களில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து அனைத்து சிவாலயங்களிலும் ஸ்வாமிகள், அம்பாளுடன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்று வருகிறது.
இதனைத் தொடர்ந்து இன்று ஸ்ரீ ஆதி கும்பேஸ்வரர், ஸ்ரீ அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர், வியாழ சோமேஸ்வரர் உள்ளிட்ட சிவாலயங்களின் ஸ்வாமிகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள தேரோட்டம் நடைபெற்றது. தேர்களை ஏராளமான பக்தர்கள் பக்தி முழக்கத்துடன் வடம் பிடித்து இழுத்தனர்.